Translate

Thursday 30 May 2019

விழி கொடுத்தால், ஒளியேற்றலாம்.

உடலுறுப்புத் தானங்களில் நாம் உயிரோடு இருக்கும் போதே எங்கள் சிறுநீரகம், எலும்பு மச்சை போன்றவற்றைத் தானம் செய்யம் முடியும். இதயம், நுரையீரல், கல்லீரல் போன்றவற்றை இரத்த ஓட்டம் நிகழ்ந்துகொண்டு உள்ள நிலையில்த் தான் தானமாகக் கொடுக்க முடியும். மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து உறுப்புத் தானம் பெறமுடியும். ஆனால் ஒருவர் இறந்த பின்பும் தானம் செய்யக் கூடிய ஒரு உறுப்பு உள்ளது. அது தான கண் என்ற பொன்னான உறுப்பு.


கண் தானம் செய்ய வயது வரம்பு கிடையாது. கண்ணாடி அணிபவர்கள் கூட கண் தானம் செய்யலாம். சர்க்கரை நோயாளிகளோ, இதய நோய், ரத்தக் கொதிப்பு நோயாளிகள், கண்புரை அறுவைசிகிச்சை செய்தோர் என்று அவர்களும் கண்தானம் செய்யலாம். இயற்கையாக மரணமெய்தியோர், மற்றும் விபத்தில் இறந்தவர்களிடமிருந்தும் கண்தானம் பெறலாம். வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறந்தாலும், அங்கு சென்று கண்தானம் பெற்றுக் கொள்வார்கள்.

அனால் HIV, மூளைக்கு காய்ச்சல், நாய்க்கடி நோய்க்காளானவர்களிடமிருந்து கண்தானம் பெறமாட்டார்கள். அத்துடன் போதைப் பொருள் பாவனையாளர், விஷத்தால் இறந்தவர், புற்றுநோயால்ப் பாதிக்கப்பட்டவரிடமிருந்தும் கண்தானம் பெறப்படமாட்டது. அதனாலேயே இறந்தவருக்கு முழு பரிசோதனை செய்து மருத்துவரிடம் முழுமையாக விசாரித்தே அந்தக் கண்ணை அறுவைசிகிச்சை செய்து எடுப்பார்கள். அதுவும் ஒருவர் இறந்து ஆறுமணிநேரத்துள் நடக்க வேண்டும்.
கண்தானம் செய்பவர் மரணமடைந்து ஆறு மணி நேரத்துள் கண் அகற்றப்பட்டு குளிரூட்டப்பட்ட சாதனத்துள் வைத்து கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு கண் வங்கியில் கண் பரிசோதனை செய்யப்பட்டு ஒன்று முதல் நான்கு வகையாகப் பிரித்து வைக்கப் படும்.

கன்மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு, ஏற்கனவே வங்கியில்ப் பதிவு செய்து வைக்கப்பட்டவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அவசர நோயாளிகட்கும் முன்னுரிமை வழங்கப் படும். அவ்வாறு கண்ணறுவை சிகிச்சை செய்பவர்களுடைய கருவிழிகளில் ஆறு அடுக்குகள் காணப்படுகின்றது. ஒரு கருவிழியை, வெவ்வேறு பிரச்சினையால்ப் பாதிக்கப்பட்ட நால்வருக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் விஞ்ஞானம் இன்று விரிந்து வளர்ந்து காணப்படுகின்றது.
கண்மாற்று அறுவை சிகிச்சையின் பொது கருவிழி மட்டுமே கண்ணில் இருந்து எடுத்த நோயாளிக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உயிரோடு இருக்கும் ஒருவரிடமிருந்து ஒருபோதும் கண் தானம் எடுக்க முடியாது. நாம் கண்தானம் செய்ய விரும்பினால் உரிய படிவத்தை நிரப்பி கண் வங்கியில்க் கொடுக்க வேண்டும். அதன் நகலை நாம் எம்மோடு வைத்துக் கொள்ளவேண்டும். அத்தோடு நம் இரத்த உறவுகளிற்கு தெரிவித்திருக்க வேண்டும். திடீர் மரணம் நிகழ்ந்தால் உடனடியாக கண்வங்கிக்கு அறிவிக்கும்படி முன்பே, சொல்லி வைக்க வேண்டும். ஏன் என்றால் ஆறுமணித்தியாலத்துள் கருவிழி உடலை விட்டு பாதுகாப்பாக எடுக்க வேண்டும் என்பதால்.
உலகின் முதல் வெற்றிகரமான கண் அறுவை சிகிச்சை 1905இல் தான் நடைபெற்றது. ஆனால் இந்த உலகமே அறியாத வரலாற்று உண்மை உலகின் முதலாவது கண்தானம் செய்தது ஒரு தமிழன். அது வேறுயாருமில்லை, கண்ணப்ப நாயனார். யார் கண்ணப்ப நாயனார் என்று தெரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள். தெரியாதவர்கள் முதியோர் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

Wednesday 22 May 2019

வெய்யில் காலத்தில் உடல்நலம் காப்போம்.

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, வெயில் உச்சத்திற்குச் செல்லப் போகின்றது, செல்ஸியஸ் டிகிரிக்கு கணக்கில் உயர போகின்றது, காற்று கூட வீச மறுக்கும், சிலவேளைகளில் அனல்க் காற்று வீசலாம்.

மக்கள் இவற்றில் இருந்து தப்புவதற்காக குளிர் நிலங்களை நாடி ஓட ஆரம்பிக்கின்றனர். சம்மர் லீவு எடுத்த மக்கள் தம்மை ஆசுவாசப் படுத்துவதற்காக இடம் விட்டு இடம் நாடு விட்டு நாடாகச் சென்று வருகிறானர்.

பகல் நேரப் பயணங்கள் மனிதனை பரிதவிக்க வைக்க போகின்றன, இந்நிலையில் ஐஸ் வாட்டர் மீது விருப்பம் தூண்டப படுவது இயல்புதான். பிரிச்சில் வைத்த குளிர்நீரை எடுத்து மடக்கு மடக்கு என்று குடிக்கத் தோன்றும்.

ஆனால் அது சரியான செயல்தானா? மருத்துவர்கள் என்ன கூறுகின்றார்கள்? வெயிலில் களைத்து வீடுவாரும் மனிதன் உடனடியாக குளிர் நீரைக் குடித்தால், திடீர் வெப்பநிலை மாற்றத்தால் உடலில் உள்ள சிறு ரத்தக் குழாய்கள் வெடித்துவிடுமாம். குளிர்நீரை குடிப்பது மட்டுமல்ல, குளிநீரில் குதி காலை நனைத்தாலக் கூட பாதிப்பு ஏற்படத் தான் செய்யும்.

வெளியில் வெயில் உச்சத்தில் இருக்கும்போது வெயில் பட்ட உடலும் சூழல் வெப்பநிலையோடு சேர்ந்து உஷ்ணமாகிவிடும். அவ்வாறு உஷ்ணநிலையில் இருக்கும் உடலின் வெளிப்புறமோ உட்புறமோ உடனடியா குளிர்வடையாக் கூடாது. காரணம் அவ்வாறு உடல் விரையாகக் குளிர்வடையும் நேரத்தில் வெளிப்புற சூழ்நிலை இப்போது வெப்பமாகவே இருக்கும், அதன் காரணத்தால் உடல் மீண்டும் தன்னை குளிர்வாக வைத்திருக்க முயலும், ஆனால் குளிர் நீரால் ஏற்கனவே குளிர்ந்துள்ள உடலை மீண்டும் குளிர்வடைய வைக்க முயலும் உடல் தொடர்ச்சியாக தோல்வியுறுவதால், விரைவாகச் சோர்வடையும். வேண்டும் என்றால் குளிர் நீர் குடித்தவுடன் பாருங்கள் உங்களை அறியாமல் ஒரு சோர்வு ஏற்படும். இது ஆரோக்கியம் அற்ற இரத்த நாளங்களை உருவாக்கி உடலை பலவீனமாகும். ஒரு கடத்தில் ரத்த நாளங்களை வெடிக்கவும் வைக்கும் அது நடந்தால் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படலாம்.

எப்படி இந்தத் தருணத்தை சமாளிப்பது என்றால், முதலில் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து உடலை அமைதி படுத்த வேண்டும் இது உடலின் வெப்பநிலையை நேர்த்தியாகக் குறைக்கும். அதன் பின் உடல் அறைவெப்பநிலை அடையும் நேரத்தில் சாதாரண குடிநீரை குடிப்பதே சாலச் சிறந்த தீர்வாகும்.

ஆதலால் குளிர் தண்ணீரைத் தடுப்போம்,
குடிதண்ணீரைக் குடிப்போம்,
உடல்நலத்தைக் காப்போம்.

எழுத்து
மங்கை அரசி.

Tuesday 21 May 2019

விண்கல்லில் இருந்து விழுந்த மழை.

இன்றும் எம் உலகில் எத்தனையோ விண்கற்கள் விழுந்தவண்ணமே உள்ளது. கண்மூடி உறங்கும் இரவில் சற்று இரவை உற்றுப் பார்த்தால் வானில் ஏதோ ஒன்று உலகை நோக்கி ஒளிர்ந்து கொண்டே வந்து மறைந்து போவதை பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படி உண்டென்றால் நீங்கள் பார்த்தது எரிகல். அவ்வாறு வந்த அந்த எரிகல்தான் விண்கல். விண்ணில் எண்ணற்ற கற்கள் இன்றும் இயக்கப் பாதை இன்றி உலாவிக்கொண்டுள்ளன. அவை பூமியின் இயக்கப்பாதைக்குள் வந்தால், பூமி அதை தன்னைநோக்கி இழுக்க ஆரம்பிக்கும். அப்போது பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியின் வளிமண்டலத் துணிக்கைகளுடன் மோதி எரிய ஆரம்பிக்கும். அவ்வாறு எரியும் கற்களில் பல பூமியை அடையமுன்னமே எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அவ்வாறு முழுமையாக எரியாமல் பூமியில் வந்து விழுந்தால் அதுவே விண்கல் என்று சொல்லப்படுகின்றது. இது பூமியில் வந்து விழுகின்றது என்று சொல்வதை விட பூமியோடு மோதுகின்றது என்றே சொல்லவேண்டும். இவ்வாறு மோதியே பூமியில் டைனோசர் அழிந்தது என்று சொல்வார்கள். ஆனால் நாம் பார்க்க இருக்கும் கதை அதையும்விட பழமைவாய்ந்த கதை. பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே பல விண்கற்கள் பூமியைத் தாக்கியதாகச் சொல்லுகின்றனர். பூமிக்கு வந்த இந்த விண்கற்கள் தான் மலையாகவும் அதே நேரம் பெரும் பள்ளத்தாக்கையும் ஏற்படுத்தியுள்ளன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதைவிட பெரும் உண்மை என்னவென்றால் நாம் இன்று பாவிக்கும் இரும்பு இந்த உலகைச் சேர்ந்ததே இல்லையாம். விண்ணில் உள்ள விண்கற்களில் அதிகம் உள்ளது இரும்புதானாம். பல விண்கற்கள் வீழ்ந்துதான் மண்ணில் இரும்பு கலந்தது என்றும் விஞ்ஞானிகள் அறிக்கை பதிந்துள்ளனர். இரும்பின் கதையை விட ஆச்சரியமான இன்னுமொரு விடயம் உள்ளது. நாம் பருகும் அத்தியாவசிய பொருளாகிய தண்ணீரே விண்ணில் இருந்து வந்த விண்கல் மூலமாகத் தான் பூமிக்கு வந்துள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானிய விண்கலமான "ஹயபுச" 2010 ஆம் ஆண்டில் "இடோகர்" என்று பெயர் சூட்டப்பட்ட விண்கல்லின் மாதிரிகளை பூமிக்கு அனுப்ப, அதை ஆராய்ந்த அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அந்த விண்கல்லில் நீர் மூலக்குறுகள் இருந்துள்ளதை பார்த்து ஆச்சர்யப்பட்டு உறுதியும் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகளில் மேற்கொண்ட ஆராய்வில் பலகோடி ஆண்டுகளிற்கு முன் ஒரு வால்நட்சத்திரம் பூமியில் மோதியிருப்பதாகவும் அதன் வால்பகுதியில் இருந்த நீர்மூலக்கூறுகள் உலகை சூழ்ந்துகொண்டது என்றும். சூரியனின் வெப்பத்தில் பூமியின் மத்தியில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாக காற்றுருவாக்கியதாகவும், விஞ்ஞானிகள் ஆய்வைப் பூர்த்திசெய்துள்ளனர். இன்று பலகோடி ஆண்டுகளின் பின் மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் என்று இந்த உலகம் இப்படி இருக்க ஒரே ஒரு காரணம் அந்த வால்நட்சத்திரத்தின் மோதல் தான். அதனால்த் தான் நாம் இன்றும் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மோதிக் கொண்டே இருக்கின்றோமோ என்னவோ?