Translate

Sunday 19 April 2015

உறங்கினேன் உன்மடியில், அதுவே உறக்கம்.

காலதனுள் தலை கோதி
உலோகத்தையே தான் மறந்து
கூஒர்... கூஒர்... கோர்... கோர்...
உறங்குகின்ற பூனை போன்று .









  
பூத்தேன் நான் என பூப் பூக்க.
பூதேனா?! என்று வண்டு வர.
தேனருத்திய போதையிலே வண்டு
பூவிதலில் உறங்கினால்ப் போல்.



உடல் நொந்த விவசாயி
ஒருவேளை உணவுண்டு
தனை மறந்துறங்கினார்ப் போல்.



திரை கடல் கடந்து இருவருடம்
ஊருறவு காணாது உழைத்து பின்
மனை திரும்பி
மனைவி மக்கள் முகம் பார்த்து
உறங்கினேனே உன்மடியில் தாய்மண்ணே
அதுவே உறக்கம்.

No comments:

Post a Comment