Translate

Wednesday 29 April 2015

பசுவாய் நான் பாம்பாய் நீ...

பால் தரும் பசுவாக நான் இருந்தேனே.
பாலூற்றி  பாம்புன்னை நான் வளர்த்தேனே.




தோகை விரித்தாடும் மயில் நீயென நானும் நினைத்தேனே - நாகம் நீயென்
தேகம் கருகும் வண்ணம் நஞ்சை உமிழ்ந்தாயே.

உன்னை நேசித்த என்னை ஜோசித்து
பிணைதானின்றி பிணமாகின்றேன்.

என் மனம் கலங்க நீ மணம்புரிந்தாய்
பெண்மனம் இதுவோ நான் இன்றறிந்தேன்.

புகைத்தால் நுரையீரல் கெடும்.
குடித்தால் கல்லீரல் கெடும். - உன்னை
நினைத்தால் என் வாழ்வே கெடும்.

நீயில்லா வாழ்க்கையை
என்றும் நான்  எண்ணியதே இல்லை.
நானில்ல வாழ்க்கையை
இன்று தினம்தினம் நீ எண்ணுகின்றாய்.

மனம் உனக்கு
மடி எவர்க்கோ
என்று வாழ
என்னால் இயலா.

பெண்ணே...
என்னை ஏமாற்றி
உன்னை நீ உயர்த்தி
இன்று நீவாழும் உன்வாழ்க்கை
நாளை கசக்கும்.
உன்னை நான் எண்ணி
மண்ணுள் உறங்கையிலும்,
பெண்ணே என் வாழ்க்கை என்றும்
ஒளி வீசும்.

No comments:

Post a Comment