தேன்.... காதல்....
தேனில் ஊறிய பேரிச்சை, காமம்.
மான்விழி கொண்டு இந்த
ஆண் உயிர் கொய்யும்
காரியம் செய்யும் பெண்ணே- இது
காமமா? காதலா?
வானவில்லின் வண்ணம் போன்று
காணுகின்றேன் உன்னை இங்கு.
காணவில்லை என்னை இன்று
தேடுகின்றேன் உன் முன் நின்று.
தாடி உந்தன் அன்பை என்று,
தாடி ஓடு வந்தே நின்று,
தேடி உன்னைப் பார்த்தேன் - என்
தேவதையைப் பார்த்தேன்.
கேள்வியதைக் கேட்டேன்
கோவப் பார்வையினைக் காட்டி- இத்தனை
தாமதம் ஏன் எனத் திட்டிச் சென்றாள்.
No comments:
Post a Comment